சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2.5 இலட்சத்திற்கும் குறைவாக பதிவு
Posted On:
03 JAN 2021 9:55AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 இலட்சத்திற்கும் குறைவாக 2,47,220 ஆக பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.39 சதவீதமாகும். 29 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 10,000-க்கும் குறைவானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 37 நாட்களாக புதிய தொற்றுக்களை விட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 20,923 பேர் புதிதாக குணமடைந்தனர்.
நாட்டில் மொத்தம் 99,27,310 பேர் (96.16%) குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 96,80,090 ஆக பதிவாகியுள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 78.10 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4985 பேரும், மகாராஷ்டிராவில் 2110 பேரும், சத்தீஸ்கரில் 1963 பேரும் குணமடைந்துள்ளனர்.
81.81 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளாவில் 5328 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3218 பேரும், சத்தீஸ்கரில் 1147 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 69.59 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 51 பேரும், மேற்கு வங்காளத்தில் 28 பேரும், கேரளாவில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685736
------
(Release ID: 1685792)
Visitor Counter : 178
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam