பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

முதலாம் தலைமுறை எத்தனால் உற்பத்திக்காக, நாட்டில் எத்தனால் வடிதிறனை அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 30 DEC 2020 3:44PM by PIB Chennai

முதலாம் தலைமுறை எத்தனால் உற்பத்திக்காக,  நாட்டில் எத்தனால் வடிதிறனை மேம்படுத்துவதற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்ததுஇதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாட்டில் சர்க்கரை உற்பத்தி 2010-11ம் ஆண்டு  முதல் அளவுக்கு  அதிகமாக உள்ளதுஇனி வரும் ஆண்டுகளிலும்நாட்டில் சர்க்கரை உற்பத்தி கூடுதலாக இருக்கவே வாய்ப்புள்ளது.

அதனால் கூடுதல் கரும்பை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதுதான் சரியான வழியாகும்.

2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10% எத்தனாலை சேர்க்கவும், 2030ம் ஆண்டுக்குள் 20% எத்தனால் சேர்க்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தரமான எத்தானல் தயாரிப்பை அதிகரிப்பதற்காகஉணவு தானியங்களான அரிசிகோதுமைபார்லிமக்காச்சோளம் மற்றும் சோளம்கரும்புசர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்துமுதல் தலைமுறை எத்தனால் உற்பத்தி செய்வதை அரசு ஊக்குவிக்கிறது.

முதல் தலைமுறை எத்தனால் உற்பத்திக்கான  வடிதிறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததுஇதற்காக புதிய  இரட்டை உணவு தானிய வடிகட்டுதல் மையங்கள் அமைக்கப்படவுள்ளனமேலும் ஏற்கனவே உள்ள கரும்புச்சாறு  வடிகட்டுதல் மையங்கள்எத்தனால் தயாரிப்பு வடிகட்டுதல் மையங்களாக  விரிவுபடுத்தப்படவுள்ளனஇதற்காக அதில்  மூலக்கூறு சல்லடை நீரிழப்பு (எம்.எஸ்.டி.எச்சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்துக்காக  வங்கியில் ஆண்டுக்கு  6 சதவீத வட்டியில் கடன் பெறும் போது,  5 ஆண்டு காலத்துக்கு வட்டி மானியம் மற்றும் ஓராண்டு காலம் கழித்து  கடனை செலுத்தும் சலுகை அல்லது வங்கி வசூலிக்கும் வட்டியில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அதை அரசு ஏற்கும்தயாரிக்கப்படும் எத்தனாலில் 75 சதவீதத்தைஎண்ணெய் நிறுவனங்களுக்கு சப்ளை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த வட்டி சலுகை கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684626

 

------

 



(Release ID: 1684734) Visitor Counter : 238