பிரதமர் அலுவலகம்

திரு.ரோத்தம் நரசிம்மா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 DEC 2020 9:55AM by PIB Chennai

திரு.ரோத்தம் நரசிம்மா மறைவிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “அறிவும், தெரிந்தறியும் ஆர்வமும் நிறைந்த இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பண்பின் உருவாய் திகழ்ந்தவர் திரு.ரோத்தம் நரசிம்மா. அவர் மிகச் சிறந்த விஞ்ஞானி. இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அறிவியல் மற்றும் புத்தாக்கத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரது மறைவால் வருந்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1680719) வருகையாளர் எண்ணிக்கை : 155