சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் வெறும் 4.35% பேர்
Posted On:
04 DEC 2020 10:34AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நேற்றை விடக் குறைந்து 4.35 சதவீதமாக உள்ளது. தற்போது 4,16,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும், புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,595 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 42,916 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோர், புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் ஆகியோருக்கிடையேயான இடைவெளி 6321-ஆக உள்ளது.
நாட்டில் மொத்தம் 90,16,289 பேர், 94.2 சதவீதத்தினர், நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்தோர், தற்போது சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கிடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, 86,00,207 ஆக தற்போது பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678219
*******
(Release ID: 1678219)
(Release ID: 1678271)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam