பிரதமர் அலுவலகம்

புரெவி புயலால் நிலவும் சூழல் குறித்து தமிழக முதல்வருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல்

Posted On: 02 DEC 2020 8:13PM by PIB Chennai

புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் சூழல் குறித்து தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

"தமிழக முதல்வர் திரு @EPSTamilNadu அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். புரெவி புயலின் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவி வரும் சூழ்நிலைகளை பற்றி நாங்கள் ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்," என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

**********************



(Release ID: 1677811) Visitor Counter : 109