சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 4.85 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்

Posted On: 23 NOV 2020 11:38AM by PIB Chennai

இந்தியாவில் கொரோனா நோயின் மொத்த பாதிப்புகளில் தற்போது 5 சதவீதத்திற்கும் குறைவாக 4.85 சதவீதம் (4,43,486)  பேர் மட்டுமே சிகிச்சை  பெற்றுவருகின்றனர்.

குணமடைந்தோர் விகிதம் 93 சதவீதத்திற்கும் அதிகமாக 93.68 ஆக பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 41,024 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதன் மூலம் நாட்டில்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,62,641 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, 81,19,155 ஆக தற்போது பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44,059 பேருக்கு  நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  கடந்த 8-ஆம் தேதி முதல் தொடர்ந்து 16 நாட்களாக  நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டு வருகின்றன. 

குளிர் காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் பல்வேறு நாடுகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,  இந்தியாவில் தாக்கம் குறைந்து வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 511 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:   

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1675020

*******

 

(Release ID: 1675020)



(Release ID: 1675067) Visitor Counter : 193