நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

கடந்த 2013ம் ஆண்டு முதல் 4.39 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு

Posted On: 06 NOV 2020 11:06AM by PIB Chennai

நாடு முழுவதும் பொது விநியோக முறையில், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இதுவரை 4.39 போலி ரேஷன் கார்டுகள்  ஒழிக்கப்பட்டுள்ளன.

பொது விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, தொழில்நுட்ப ரீதியிலான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பயனாளிகளுக்கு ஆதார் எண்கள் இணைக்கப்பட்ட, டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டனஇதன் மூலம் போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்பட்டன. 2013ம் ஆண்டு முதல் 2020 வரை 4.39 கோடி போலி ரேஷன் அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நீக்கியுள்ளனநேர்மையான பயனாளிகளுக்கு பழைய ரேஷன் கார்டுகளில் பெயரை நீக்கி, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர், ரேஷன் கடைகள் மூலம் மானிய விலை உணவு தானியங்களை பெற்ற வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை  நாட்டின் 2011 மக்கள் தொகை கணக்குப்படில்  3ல் 2 பங்குதற்போது 80 கோடிக்கும் அதிகமானோர், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.3, 2, 1 என்ற மானிய விலையில் மாதந்தோறும் உணவு தானியங்களை பெற்று வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670547

**********************

(Release ID: (Release ID: 1670547)



(Release ID: 1670596) Visitor Counter : 152