பிரதமர் அலுவலகம்

பிரான்சின் நைஸ் நகரத்தின் தேவாலயத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்

Posted On: 29 OCT 2020 7:55PM by PIB Chennai

இன்று நைஸ் நகரத்தின் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதல் உட்பட பிரான்ஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "இன்று நைஸ் நகரத்தின்  தேவாலயத்தில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல் உட்பட அண்மையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.  பிரான்ஸ் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு  எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், பிரான்சுடன் இந்தியா துணை நிற்கிறது" என  குறிப்பிட்டுள்ளார்.

**********************

 



(Release ID: 1668633) Visitor Counter : 175