பாதுகாப்பு அமைச்சகம்

தில்லியில் கடற்படை விருது விழா

Posted On: 14 OCT 2020 3:25PM by PIB Chennai

கடற்படையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், சாதனை படைத்தவர்களுக்கும் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கும் விழா தில்லியில் உள்ள ஐஎன்எஸ் இந்தியா வளாகத்தில் 2020, அக்டோபர் 14ம் தேதி நடந்தது. இந்தாண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், விருதுகளை வழங்கினார்.  ஒரு யூத் சேவா பதக்கம், ஒரு நவ் சேனா பதக்கம், 6 விசிஸ்ட் சேவா பதக்கங்கள் உட்பட மொத்தம் 8 பதக்கங்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சி, அணிவகுப்பு மரியாதையுடன், நடந்தது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, கடற்படை விருது விழா, அந்தந்த கடற்படை கட்டுபாட்டு மண்டலங்களில் நடந்தது. இந்த விழாவில் குறைந்த அளவிலான அதிகாரிகள், மற்றும் விருது பெற்ற கடற்படையினரின் வாழ்க்கைத் துணைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.  கொவிட் 19 நெறிமுறைளுடன், இந்த விருது விழா நடந்தது. எளிமையாக நடந்தாலும், விருது பெற்றவர்கள் நினைவு கூறும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது.

**********************



(Release ID: 1664373) Visitor Counter : 112