பிரதமர் அலுவலகம்

மத்திய அமைச்சர் திரு.ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 08 OCT 2020 9:59PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு.ராம் விலாஸ் பஸ்வான் மறைவையொட்டி பிரதமர் திரு.நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமது தொடர் டிவிட் பதிவுகளில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு எனக்கு துக்கம் ஏற்பட்டுள்ளது. நமது தேசத்துக்கு வேறு யாரையும் கொண்டு இட்டு நிரப்பமுடியாத அளவுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திரு.ராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் மரணம் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பாகும். ஒரு நண்பரை, மதிப்புமிக்க சகாவை, ஒவ்வொரு ஏழையும் கண்ணியத்துடன் வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவரை நான் இழந்து விட்டேன்.

திரு.ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள், கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டுடன் அரசியலில் வளர்ச்சி பெற்றார். நமது ஜனநாயகத்தின் மீது நடந்த அவசர நிலை பிரகடனம் என்ற தாக்குதலுக்கு எதிராக ஒரு இளம் தலைவராக கொடுங்கோன்மையை எதிர்த்தார். அவர் மிகச்சிறந்த அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார். பல்வேறு கொள்கை முடிவுகளில் நீடித்த பங்களிப்பை வழங்கி உள்ளார்.

திரு. ராம்விலாஸ் பஸ்வான் அவர்களுடன் இணைந்து தோளோடு தோள் நின்று பணியாற்றியது வியக்கத்தக்க அனுபவமாகும். அமைச்சரவை கூட்டத்தின் போது அவரது குறுக்கீடுகள் நுண்ணறிவு கொண்டவையாக இருந்தன. அரசியல் ஞானத்திலிருந்து, ஆளுகை விவகாரங்களை கையாளுவதில் ராஜதந்திரியாகவும் புத்திசாலியாகவும் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்திஎன்று கூறி உள்ளார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662895



(Release ID: 1662980) Visitor Counter : 101