பாதுகாப்பு அமைச்சகம்

88வது விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வாழ்த்து

Posted On: 08 OCT 2020 12:48PM by PIB Chennai

இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப்படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ 88 ஆண்டு அர்ப்பணிப்பு, தியாகம், சிறப்பான செயல்பாடு, விமானப்படையின் பயணத்தை குறிக்கிறது. இது இன்று வெல்ல முடியாத படையாக கருதப்படுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

விமானப்படை வீரர்களை எண்ணி நாடு பெருமிதம் கொள்வதாகவும், சவால்களை சந்திக்கவும், எதிரிகளை தடுக்கவும்  தயாராக உள்ள விமானப்படையின்  வலிமைக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  ‘‘நவீன மயமாக்கல் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் விமானப்படையின் போர் திறனை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’’ எனவும் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் திரு.ராஜ்நாத்  சிங் குறிப்பிட்டுள்ளார்.

எந்த சூழல் ஏற்பட்டாலும், இந்திய வான் எல்லையை விமானப்படை எப்போதும் பாதுகாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர், விமானப்படையினரின் மகிழ்சியான செயல்பாட்டுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662663

*******

 

(Release ID: 1662663)



(Release ID: 1662725) Visitor Counter : 118