உள்துறை அமைச்சகம்

அதிரடி விரைவுப் படையின் 28-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

Posted On: 07 OCT 2020 11:16AM by PIB Chennai

அதிரடி விரைவுப் படையின் 28-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். டிவிட்டர் செய்தி ஒன்றில் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ள திரு. அமித் ஷா, “அதிரடி விரைவுப் படையின் 28-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் அதிரடி விரைவுப்படை சிறந்து விளங்குகிறது. பல்வேறு மனிதநேயம் சார்ந்த கடைமைகள் மற்றும் பணிகள் மற்றும் ஐநா-வின் அமைதி இயக்கங்களில் இந்தியாவை மீண்டும், மீண்டும் கவுரவப்படுத்தி உள்ளதுஎன்று கூறி உள்ளார்.

ஆரம்பத்தில் தற்காலிகமாக 10 பட்டாலியன்களைக் கொண்டு 1992-ம் ஆண்டு அக்டோபரில் அதிரடி விரைவுப்படை என்ற சிறப்புப்படை உருவாக்கப்பட்டது. பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மேலும் 5 பிரிவுகள் அதிகரிக்கப்பட்டன. கலவர சூழல்கள் மற்றும் கலவரம்போன்ற சூழல்களை கையாளவும், சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களிடம்நம்பிக்கையை ஏற்படுத்தவும்உள்ளூர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662247

******

(Release ID: 1662247)



(Release ID: 1662295) Visitor Counter : 135