பிரதமர் அலுவலகம்

தேசிய ஆள்தேர்வு முகமை அமைக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2020 7:53PM by PIB Chennai

தேசிய ஆள்தேர்வு முகமை அமைக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு, தேசிய ஆள்தேர்வு முகமை, ஒரு வரமாக இருக்கும். பொது தகுதித் தேர்வு மூலம், ஏராளமான தேர்வுகள் தவிர்க்கப்படுவதுடன், விலை மதிப்பற்ற நேரம் மிச்சமாகி, செலவுகளும் குறையும். மேலும், வெளிப்படைத்தன்மைக்கு இது பெரும் ஊக்குவிப்பாக இருக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

****


(வெளியீட்டு அடையாள எண்: 1647200) வருகையாளர் எண்ணிக்கை : 174