பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 பாதிப்பைக் குறைப்பது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருடன், மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் உரையாடினார்

Posted On: 26 MAY 2020 3:28PM by PIB Chennai

ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் திருமதி.லிண்டா ரெனால்ட்ஸுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

கோவிட்-19 தொற்றுக்கு இரு நாடுகளிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு பாதுகாப்பு அமைச்சர்களும் விவாதித்தனர். கோவிட்-19ஐ எதிர்கொள்ளும் சர்வதேச முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பு பற்றியும்,  தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியும், திருமதி. லிண்டா ரெனால்ட்ஸிடம் திரு. ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். கோவிட்-19 தொடர்பான சவால்களை எதிர்கொள்ள, இந்தியா-ஆஸ்திரேலியா இடையோன ராணுவ உறவு, இரு நாடுகளும் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல அடிப்படையை வழங்குவதாக இருவரும் ஒப்புக் கொண்டனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா ராணுவ உறவு திட்டத்தின் கீழ் இருதரப்பு ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதில் இரு அமைச்சர்களும் தங்களது உறுதியைத் தெரிவித்தனர்.

                                                                                                                        -----



(Release ID: 1626921) Visitor Counter : 140