உள்துறை அமைச்சகம்

இந்தியாவிலிருந்து செல்லும் அல்லது வருகை தரும் வெளி நாட்டு பயணிகளின் அனைத்து விசாக்களும் சர்வதேச விமான பயணங்கள் மீதான தடை விலக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Posted On: 05 MAY 2020 8:00PM by PIB Chennai

நாட்டில் கோவிட் 19 தொற்று நோய் பாதிப்பின் காரணமாக, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்போதைய தூதரக விசாக்கள், அதிகாரபூர்வ விசாக்கள், ஐக்கிய நாடுகள்/ சர்வதேச அமைப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் திட்டப்பணிகள் பிரிவுகளுக்கான விசாக்கள் நீங்கலாக மற்ற அனைத்து விசாக்களும்3 மே,2020 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் 17 4 2020 அன்று முடிவு செய்திருந்தது.

 (https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615500)

இதுகுறித்து மறு பரிசீலனை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவிலிருந்து செல்லும்/ இந்தியாவிற்கு வருகை தரும் பயணங்களுக்கான சர்வதேச விமான பயணங்கள் மீதான தடை மத்திய அரசால் நீக்கப்படும் வரை தூதரக விசாக்கள், அதிகாரபூர்வ விசாக்கள், ஐக்கிய நாடுகள்/ சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் திட்டப் பணிகள் பிரிவுகளுக்கான விசாக்கள் நீங்கலாக மற்ற அனைத்து பிரிவு விசாக்களும் ரத்து செய்யப்பட்டது தொடர்ந்து நீடிக்கும் என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையைப் பார்க்க இங்க தொடர்பு கொள்ளவும் . Click here to see Official Order

 

*****



(Release ID: 1621364) Visitor Counter : 137