நிதி அமைச்சகம்
கோவிட்-19 தொற்று அச்சுறுத்தல் உள்ள சூழலில் ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு உதவ உறுதிபூண்டுள்ளோம் – சிபிஐசி
Posted On:
17 APR 2020 9:12PM by PIB Chennai
தற்போது கோவிட்-19 தொற்று அச்சுறுத்தல் உள்ள சூழலில், ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு உதவ உறுதி பூண்டுள்ளோம் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
வரியை திரும்ப அளிக்குமாறு மார்ச் 30 ம் தேதி முதல் அளிக்கப்பட்ட 12,923 விண்ணப்பங்களை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியம் பரிசீலித்துள்ளது. இதன் மதிப்பு, ரூ.5,575 கோடி. கடந்த வாரத்தில் மட்டும், ரூ.3,854 கோடி மதிப்பிலான 7,873 விண்ணப்பங்களைப் இந்த வாரியம் பரிசீலித்துள்ளது.
சில குறிப்பிட்ட வகை சேவைகள் அல்லது மூலதனப் பொருட்கள் மீது செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெறுவதற்கு ஜிஎஸ்டி சட்டம் அனுமதிப்பதில்லை. உதாரணமாக, ஏற்றுமதி மற்றும் பிற வரியில்லாத பொருட்கள் விநியோகத்தின் மீதான, மூலதனப் பொருட்களின் உள்ளீடு வரியை திரும்பப் பெற அனுமதிப்பதில்லை. மேலும், சேவைகள் மற்றும் மூலதனப் பொருட்கள் மீது பயன்படுத்தப்படும் உள்ளீடு வரியை, உள்ளீடு அளவைவிட, உற்பத்திப் பொருட்கள் மீதான வரி குறைவாக இருக்கும் பிரிவுகளில் திரும்பப் பெற முடியாது.
****
(Release ID: 1615664)