பிரதமர் அலுவலகம்

சோசியலிஸ்ட் வியட்நாம் குடியரசின் பிரதமருக்கும் நமது பிரதமருக்கும் இடையே தொலைபேசி உரையாடல்

प्रविष्टि तिथि: 13 APR 2020 3:20PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சோசியலிஸ்ட் வியட்நாம் குடியரசின் பிரதமர் திரு. இங்குயென் சுவான் புக்குடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும் இந்தச் சவாலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவது உட்பட இருதரப்பு ஒத்துழைப்புக்கும் பல வாய்ப்புகள் உள்ளன என்பதை தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  அவரவர் நாட்டில் உள்ளவர்கள் அடுத்த நாட்டின் குடிமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்தியா – வியட்நாம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் செயல் உத்தி சார்ந்த பரஸ்பர பங்கேற்பின் முக்கியத்துவத்தை இரண்டு தலைவர்களும் வலியுறுத்தினர்.  பல்வேறு பிரிவுகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் தங்களின் திருப்தியை தெரிவித்தனர்.  மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் இருதரப்பு உறவுகள் குறித்த மற்ற அம்சங்களை ஒருங்கிணைப்பதற்கும் வரும் நாட்களில் இரு நாடுகளின் குழுக்களும் தொடர்ந்து ஒன்றுக்கு ஒன்று தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

தற்போதைய நெருக்கடி நிலையில் வியட்நாம் மக்களின் ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.


(रिलीज़ आईडी: 1614005) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam