கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மத்திய கப்பல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்து ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு ரூ. 7 கோடி

Posted On: 06 APR 2020 12:10PM by PIB Chennai

கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கப்பல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்து `பிரதமரின் பேரிடர் கால குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு’ (பிஎம்-கேர்ஸ்) ரூ.7 கோடி மேல் நன்கொடை வழங்கியுள்ளனர்.

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தில் பணியாற்றும் 3891 ஊழியர்கள் ரூ.72,13,000-ம், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் 691 பணியாளர்கள் ரூ.15,00,000-ம், காமராசர் துறைமுகத்தின் 102 ஊழியர்கள் ரூ.3,71,624-ம் நன்கொடையாக அளித்துள்ளனர்.

இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 12 துறைமுகங்கள் மற்றும் ஆறு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் 29,027 ஊழியர்கள் சேர்ந்து தங்களின் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இதன்படி, பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7,10,00,463 வழங்கப்பட்டுள்ளது.



(Release ID: 1611540) Visitor Counter : 128