மத்திய அமைச்சரவை

இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையில் சட்டபூர்வ எடை அளவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 JUN 2019 8:08PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையில் சட்டபூர்வ எடை அளவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜூன் 13-14, 2019ல் நடைபெறும் SCO நிகழ்வின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

பயன்கள்:

  • உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இடையே பரஸ்பர வணிகத் தீர்வு செய்யப்படுவதை எடை அளவியல் சார்ந்து கண்காணிப்பதில் உள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை இதன் மூலம் நடைபெறும்
  1. சட்டபூர்வ எடை அளவியல் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பரிமாற்றம் செய்து கொள்வது;
  2. சட்டபூர்வ எடை அளவியல் விஷயங்களைக் கையாளும் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அல்லாதவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல்;
  3. சட்டபூர்வ எடை அளவியல் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைப் பரிமாற்றம் செய்து கொள்வது.
  4. பரஸ்பர நலன்களைக் கருத்தில் கொண்டு நடைபெறும் பொருத்தமான கருத்தரங்குகள், பயிலரங்குகள், கூட்டங்கள், இணைப்பு கற்றல் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பது;
  5. முன்னரே பேக்கேஜ் செய்யப்பட்ட சரக்குகளுக்கான தேவைகள் பட்டியலை உருவாக்குதல் மற்றும் முன்னரே பேக்கேஜ் செய்த சரக்குகள் மீது அரசு எடை அளவியல் கண்காணிப்பை செயல்படுத்துதல்;
  6. முன்னரே பேக்கேஜ் செய்த சரக்குகள் குறித்த விதிகள்/ ஒழுங்குமுறைகள் அமலாக்கத்தின் நிலையை ஆய்வு செய்தல்;


(Release ID: 1574241) Visitor Counter : 126