வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், நியூயார்க்கில் உலகின் முன்னணி தொழில்துறையினருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 3:33PM by PIB Chennai
மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நேற்று (28 மே 2026) நியூயார்க் நகரில், உயர்மட்ட வணிக, முதலீட்டு சந்திப்புகளை நடத்தினார்.
இந்தப் பயணத்தின் போது, அமைச்சர், கார்லைல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஹார்வி ஸ்வார்ட்ஸ், மார்கன் ஸ்டான்லியின் தலைமைச் செயல் அதிகாரி திரு டெட் பிக், வார்பர்க் பிங்கஸின் தலைவர் திரு சார்லஸ் கே, அம்னியல் பார்மசூட்டிகல்ஸின் தலைமைச் செயல் அதிகாரி திரு சிந்து படேல், மாஸ்டர்கார்டின் தலைமைச் செயல் அதிகாரி திரு மைக்கேல் மீபாக் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக-முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துதல், இந்தியாவில் உலகளாவிய வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், விநியோகச் சங்கிலியின் திறனை மேம்படுத்துதல், நிதிச் சேவைகள், சுகாதாரம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, உற்பத்தி, புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
அமெரிக்க-இந்தியா உத்திசார் ஒத்துழைப்பு மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வணிகக் கலந்துரையாடலில், வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முக்கிய வணிக பிரதிநிதிகள் பங்கேற்றனர. இதில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரையாற்றினார். இந்தக் கலந்துரையாடல், இந்தியாவின் வலுவான வளர்ச்சிப் பாதை, பொருளாதார சீர்திருத்தங்கள், வணிகம் செய்வதில் எளிமை, ஒத்துழைப்புக்கு சாத்தியமுள்ள துறைகள், முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவை குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266587®=3&lang=1
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266767)
வருகையாளர் எண்ணிக்கை : 11