பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 8:01PM by PIB Chennai

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங்கை சந்தித்ததில் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம்  போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்திய-ஆஸ்திரேலிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்தும், விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

 

இந்த சந்திப்புப் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியதாவது:

“ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம்  போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்திய-ஆஸ்திரேலிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்தும், விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை  உருவாக்குவதற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்  தொடர்ந்து பாடுபடும்.

@SenatorWong”

***

(Release ID: 2265613)        

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265669) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu