பிரதமர் அலுவலகம்
“வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி” என்ற தலைப்பில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 8:07PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11:30 மணியளவில் "வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி" என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பொது மூலதனம், உள்கட்டமைப்பு, வங்கித் துறை சீர்திருத்தங்கள், நிதித் துறை கட்டமைப்பு, மூலதனச் சந்தைகளை வலுப்படுத்துதல் மற்றும் வரி சீர்திருத்தங்கள் மூலம் வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவை குறித்து விவாதங்கள் இடம்பெறும்.
2026–27 மத்திய பட்ஜெட்டின் முக்கிய கரு பொருள்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைதள கருத்தரங்குத் தொடரில், பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கு முதலாவதாகும். 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகளை வலுப்படுத்துவது, விளைவு சார்ந்த செயல்படுத்தலை உறுதி செய்வது, கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல், பங்கேற்பாளர்களிடமிருந்து கட்டமைக்கப்பட்ட கருத்துக்களைப் பெறுதல் முதலியவற்றில் இந்தக் கருத்தரங்கு கவனம் செலுத்தும். முக்கிய பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க, தொழில்துறை, நிதி நிறுவனங்கள், சந்தை பங்கேற்பாளர்கள், அரசு, தொழில்துறை ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பங்குதாரர்களை இந்தத் தொடர் கருத்தரங்குகள் ஒன்றிணைக்கும்.
***
(Release ID: 2233236)
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235334)
வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati