பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

எஸ்டோனிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 6:16PM by PIB Chennai

எஸ்டோனிய அதிபர் மேதகு திரு அலர் கரீஸ்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

 

எதிர்கால தொழில்நுட்பங்கள், எரிசக்தி மேலாண்மை, திறன் வளர்ப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் இணைந்து பணியாற்றுவது குறித்து தலைவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

 

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு மோடி குறிப்பிட்டதாவது:

 

“தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவில்  குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ள எஸ்டோனிய அதிபர் அலர் கரீஸ் உடனான சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமான இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மையப்படுத்தி எங்களது பொருளாதார கூட்டு முயற்சியை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது பற்றி ஆலோசித்தோம். எதிர்கால தொழில்நுட்பங்கள், எரிசக்தி மேலாண்மை, திறன் வளர்ச்சி மற்றும் பல்வேறு விஷயங்களில் இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசினோம்.

@AlarKaris”

 

(Release ID: 2229747)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229977) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Malayalam , Malayalam