பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுயாஷ் ஜாதவிற்கு பிரதமர் வாழத்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2023 6:46PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஹாங்சுவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 50 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சுயாஷ் ஜாதவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 50 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள சுயாஷ் ஜாதவிற்கு எனது வாழ்த்துகள்.

இந்தப் போட்டியில் அவரது செயல்திறன் மற்றும் மன உறுதி இந்த வெற்றிக்கு காரணமாக உள்ளது. இந்த சாதனைக்காகா இந்தியா பெருமிதம் கொள்கிறது.”

***

(Release ID: 1972138)

SS/SV/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2188625) வருகையாளர் எண்ணிக்கை : 20