பிரதமர் அலுவலகம்
காலாட்படை தினத்தையொட்டி காலாட்படையின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
Posted On:
27 OCT 2025 8:39PM by PIB Chennai
காலாட்படை தினத்தையொட்டி காலாட்படையின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“காலாட்படை தினத்தன்று, நமது காலாட்படைகளின் உறுதியான துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் போற்றுகிறோம். நம் தேசத்தைப் பாதுகாப்பதில் வீரர்களின் உறுதிப்பாடு, வலிமை மற்றும் தியாகத்தின் வழிகாட்டியாக விளங்குகிறது. ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கும் வகையில், துணிச்சல் மற்றும் சேவையின் உயர்ந்த கொள்கைகளை ஒவ்வொரு வீரரும் வெளிப்படுத்துகிறார்.
@adgpi”
(Release ID: 2183119)
***
SS/BR/SH
(Release ID: 2183156)
Visitor Counter : 5
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam