பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 01 OCT 2025 3:23PM by PIB Chennai

பிலிப்பைன்சின் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் கடும் சேதம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் இறைவளை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இந்த துயரமான தருணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் இந்தியா துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 "பிலிப்பைன்சின் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் கடும் சேதம் குறித்து மிகவும் மனவருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது  ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பிலிப்பைன்சுடன் இந்தியா துணை நிற்கும்."

(Release ID 2173559)

SS/VK/KR

-----


(रिलीज़ आईडी: 2182792) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam