பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி – பிரதமர் திரு நரேந்திர மோடி

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2025 2:30PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  ஜிகாவாட் அளவிலான தரவு மைய உள்கட்டமைப்பை உள்ளடக்கிய இந்தப் பன்முக முதலீடு, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பத்தை பரவலாக்குவதில் இது சக்திமிக்கதாக அமையும் என்றும் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவை உறுதி செய்யும் என்றும் நமது குடிமக்களுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்களை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.  நமது மின்னணு பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளித்து  உலகளாவிய தொழில்நுட்ப தலைமைத்துவமாக இந்தியாவை திகழச் செய்யும் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ஆந்திரப்பிரதேசததின் விசாகப்பட்டினத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜிகாவாட் அளவிலான தரவு மைய உள்கட்டமைப்பை உள்ளடக்கிய இந்தப் பன்முக முதலீடு, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது. தொழில்நுட்பத்தை பரவலாக்குவதில் இது சக்திமிக்கதாக அமையும், அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவை உறுதி செய்யும். நமது குடிமக்களுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்களை அளிக்கும்.  நமது மின்னணு பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளித்து உலகளாவிய தொழில்நுட்ப தலைமைத்துவமாக இந்தியாவை திகழச் செய்யும்.!”

***

(Release ID: 2178853)

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2179000) வருகையாளர் எண்ணிக்கை : 47