நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின்சக்தி திட்டத்திற்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் 10,907 கோடி ரூபாய் கடனுதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Posted On: 07 OCT 2025 4:22PM by PIB Chennai

பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான, குறைந்த செலவிலான சூரிய மின்சக்தியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பர் 2025 வரை பொதுத்துறை வங்கிகள் மூலம் 5.79 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு 10,907 கோடி ரூபாய் அளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது வீடுகளின் கூரை மேல் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான தகடுகளை அமைப்பதற்காக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை தடையின்றி செயல்படுத்தும் வகையில் பிணையில்லா குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கும், கடன் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையிலும் பொதுத்துறை வங்கிகளால் கடன் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான கடனுதவியை பெற ஜன் சமர்த் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்திக்கான தகடுகளை அமைக்கவும், சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதற்கும் பிணையில்லா குறைந்த வட்டியில் 2 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க இத்திட்டம் வகைசெய்கிறது. மாதாந்திர கடன் தவணையை செலுத்துவதற்கு 6 மாத காலம் வரை நீட்டிப்பு வழங்குவதுடன் மின்சாரத்திற்கான செலவுகளையும் வெகுவாக குறைக்க உதவுகிறது. சுய அறிக்கை அடிப்படையில் டிஜிட்டல் முறையில் கடன்களுக்கான அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175815

***

AD/SV/AG/SH


(Release ID: 2175998) Visitor Counter : 9