பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்

Posted On: 02 OCT 2025 11:36PM by PIB Chennai

மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார்இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

"மத்தியப் பிரதேசம், காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து நான் மிகுந்த துயரமடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். - பிரதமர் @narendramodi"

****

(RELEASE ID: 2174326)

SS/SE/SG


(Release ID: 2174516) Visitor Counter : 6