பிரதமர் அலுவலகம்
அனைவருக்கும் வலிமை மற்றும் நல்வாழ்வை வழங்குமாறு பிரதமர் தேவி அன்னையிடம் பிரார்த்தனை
Posted On:
28 SEP 2025 9:00AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசத்திற்காக தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்குமாறு தேவி அன்னையின் பாதங்களில் மனமுருகப் பிரார்த்தனை செய்தார். ஆன்மீக உற்சாகம் மற்றும் கூட்டு நல்லெண்ணத்துடன் எதிரொலிக்கும் ஒரு செய்தியில், அனைத்து மக்களின் நல்வாழ்வு, தைரியம் மற்றும் உள் வலிமைக்காக பிரதமர் பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"தேவி அன்னையின் பாதங்களில் கோடிக்கணக்கான வணக்கங்கள்! அனைவருக்கும் அசாத்திய தைரியத்தையும் சிறந்த ஆரோக்கியத்தையும் அன்னை வழங்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவருடைய அருள் அனைவரின் வாழ்க்கையிலும் தன்னம்பிக்கையை விதைக்கட்டும்."
*****
Release ID: ( 2172341)
SS/PKV/SG
(Release ID: 2172386)
Visitor Counter : 9