உள்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        இந்தி தின விழாவையொட்டி, குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ஐந்தாவது அகில பாரதிய அலுவல் மொழி சம்மேளனத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  திரு. அமித் ஷா பங்கேற்பு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                14 SEP 2025 4:55PM by PIB Chennai
                
                
                
                
                
                
                இந்தி தின விழாவையொட்டி, குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற்ற 5வது அகில பாரதிய அலுவல் மொழி சம்மேளனத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை  அமைச்சருமான திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல், மத்திய அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 
மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், இந்திய மொழிகளின் இணைப்பு மொழி இந்தி என்றும், இந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும் கூறினார். இதற்கு மிகப்பெரிய உதாரணம் குஜராத் என்று திரு. ஷா கூறினார். குஜராத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், கே.எம். முன்ஷி ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை ஊக்குவித்தனர். குஜராத்தி மற்றும் இந்தி இணைந்து வாழ்வது குஜராத்தை இரு மொழிகளின் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார். குஜராத்தின் கல்வி முறையின் ஒரு பகுதியாக இந்தி உள்ளது என்றும், இதன் காரணமாக, குஜராத்தின் குழந்தைகளின் அணுகல் நாடு முழுவதும் பெரிதும் விரிவடைந்துள்ளது என்றும் திரு ஷா கூறினார். பல தொலைநோக்குத் தலைவர்கள் இந்திய மொழிகளை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கற்றுக் கொடுத்ததாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தி மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார், இதன் விளைவாக குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் எங்கும் சென்று எளிதாக வணிகம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
சாரதி மொழிபெயர்ப்பு முறை இந்தியில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் எளிதாக மொழிபெயர்க்க உதவுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அனைத்து மாநில முதலமைச்சர்களும் அந்தந்த மாநில மொழிகளில் கடிதங்களை அனுப்புமாறு திரு ஷா வலியுறுத்தினார்,  சாரதி அமைப்பு எந்த மொழியிலும் மொழிபெயர்க்கவும், இந்தியில் இருந்து பதில்களைப் பெறுபவரின் மொழியில் மொழிபெயர்க்கவும் வசதிகள் உள்ளன என்றும்அவர் தெரிவித்தார். 
சுயராஜ்யத்திற்கான போராட்டத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மூன்று முக்கிய கொள்கைகளை வலியுறுத்தினார் என்று திரு அமித் ஷா கூறினார்: சுயராஜ்யம், சுயதர்மம் மற்றும் சுயபாஷா, இவை அனைத்தும் தேசிய பெருமையுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. பேசும் மொழி தனக்கென இல்லாத ஒரு நாடு உண்மையிலேயே சுதந்திரத்தையோ அல்லது பெருமையையோ அனுபவிக்க முடியாது என்று அவர் கூறினார். 
குஜராத்தி அகராதியின் வளர்ச்சியில் மகாத்மா காந்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ததாகவும், வலுவான தாய்மொழி இல்லாமல் ஒரு சமூகம் உலகளவில் உயர்ந்து நிற்க முடியாது என்பதை உணர்ந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி விரிவான பணிகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். அவர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு ஷா வலியுறுத்தினார்
சமஸ்கிருதம் நமக்கு அறிவு நதியைக் கொடுத்தது, இந்தி அந்த அறிவை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றது, தாய்மொழிகள் அதை ஒவ்வொரு தனிநபருக்கும் பரப்பியது என்று அவர் கூறினார்.
பிற மொழிப் பின்னணியைச் சேர்ந்த சுமார் 3 லட்சத்து 28 ஆயிரம் அரசு ஊழியர்கள் இந்தியில் பயிற்சி பெற்றுள்ளனர். கூடுதலாக, 40,000 ஊழியர்கள் தட்டச்சு செய்வதிலும், 1,918 பேர் சுருக்கெழுத்திலும் பயிற்சி பெற்றுள்ளனர், மேலும் 13,000 பேர் மொழிபெயர்ப்பிலும் பயிற்சி பெற்றுள்ளனர். பிரதமர் மோடி 12 மொழிகளில் JEE, NEET மற்றும் UGC தேர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளார், இது அவரவர் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். 1970களில், இந்தி கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறி வருவதாக மக்கள் கூறினர், ஆனால் இன்று நாம் அலுவல் மொழியும் நமது இந்திய மொழிகளும் எதிர்கால மொழிகள் என்று பெருமையுடன் கூறலாம், மேலும் அவை தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் நீதிக்கான மொழிகளாகவும் மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 2166537)
AD/PKV/RJ
                
                
                
                
                
                (Release ID: 2166588)
                Visitor Counter : 8