பிரதமர் அலுவலகம்
சந்திரசேகர் ஆசாத் பிறந்த தினத்தில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்
Posted On:
23 JUL 2025 9:43AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, சந்திரசேகர் ஆசாத் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். "இந்தியாவின் சுதந்திரத்திற்கான தேடலில் அவரது பங்களிப்பு மிகவும் மதிக்கத்தக்கது. அது நமது இளைஞர்களை துணிச்சலுடனும், உறுதியுடனும் நீதிக்காக உறுதுணையாக நிற்க தூண்டுகிறது" என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“சந்திரசேகர் ஆசாத் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் இணையற்ற வீரத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினார். இந்தியாவின் சுதந்திரத்திற்கான தேடலில் அவரது பங்களிப்பு மிகவும் மதிக்கத்தக்கது. நீதிக்காக, துணிச்சலுடனும், உறுதியுடனும் துணை நிற்க நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது."
******
(Release ID: 2147110)
VL/SV/KPG/KR
(Release ID: 2147235)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam