பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

11 ஆண்டுகளில் சுரங்கத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றகரமான சீர்திருத்தங்கள் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2025 3:06PM by PIB Chennai

கடந்த பதினொரு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள் இந்தியாவின் சுரங்கத் துறையை கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக எவ்வாறு நிலைநிறுத்தியுள்ளன என்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டியின் பதிவிற்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது:

"கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் எவ்வாறு கூட்டுறவு கூட்டாட்சி முறையை சுரங்கத் துறையின் ஒரு அடையாளமாக மாற்றியுள்ளன, மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகத்தை மேம்படுத்தியுள்ளன என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு. திரு ஜி கிஷன் ரெட்டி எழுதியுள்ளார்."

***

(Release ID: 2138877)
AD/TS/IR/RR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2138995) வருகையாளர் எண்ணிக்கை : 14