பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதியில் அற்புதமான வெற்றியை ஈட்டியுள்ள திவ்யா தேஷ்முக்கை பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 19 JUN 2025 2:00PM by PIB Chennai

லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதி இரண்டாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் ஹூ இஃபானுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள இந்திய செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;

“லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதி இரண்டாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் ஹூ இஃபானை தோற்கடித்த திவ்யா தேஷ்முக்கிற்கு பாராட்டுகள். அவரது வெற்றி மனஉறுதியையும், அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. வளர்ந்து வரும் செஸ் வீரர்கள் பலருக்கும் இது ஊக்கமளிக்கும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.

@DivyaDeshmukh05”

***

(Release ID: 2137609)
AD/SMB/RR/KR

 


(Release ID: 2137708)