பிரதமர் அலுவலகம்
ஜி7 உச்சி மாநாடு: இந்தியா-கொரிய குடியரசு பிரதமர்கள் சந்திப்பு
Posted On:
18 JUN 2025 2:53PM by PIB Chennai
கனடாவின் கனனாஸ்கிஸில் 2025, ஜூன் 17 அன்று நடந்த 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி கொரிய குடியரசுத் தலைவர் திரு லீ ஜே-மியுங்கை சந்தித்தார். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"அதிபர் திரு. லீ ஜே-மியுங்கும் நானும் கனடாவில் மிக ஆக்கப்பூர்வமான சந்திப்பை நடத்தினோம். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் இதர துறைகளிலும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன."
***
(Release ID: 2137194)
VL/IR/SG/KR
(Release ID: 2137291)
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam