பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி7 உச்சி மாநாடு: இந்தியா-கொரிய குடியரசு பிரதமர்கள் சந்திப்பு

Posted On: 18 JUN 2025 2:53PM by PIB Chennai

கனடாவின் கனனாஸ்கிஸில் 2025, ஜூன் 17 அன்று நடந்த 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி கொரிய குடியரசுத் தலைவர் திரு லீ ஜே-மியுங்கை சந்தித்தார். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"அதிபர் திரு. லீ ஜே-மியுங்கும் நானும் கனடாவில் மிக ஆக்கப்பூர்வமான சந்திப்பை நடத்தினோம். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் இதர துறைகளிலும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன."

***

(Release ID: 2137194)

VL/IR/SG/KR

 


(Release ID: 2137291)