பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 07 JUN 2025 12:38PM by PIB Chennai

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

இந்தியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும், பயங்கரவாதிகளுக்கும் அவர்களைக் தூண்டிவிடுபவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் காட்டப்படாது என்றும் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்துவதாக திரு மோடி கூறியுள்ளார்.

 

மேற்கூறிய கட்டுரை குறித்து பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் தளப்  பதிவிற்கு பதிலளித்து திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;

 

"எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை பாதுகாப்பு  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்  மீண்டும் உறுதிப்படுத்துகிறார். இந்தியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும், பயங்கரவாதிகளுக்கும் அவர்களைத் தூண்டிவிடுபவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் காட்டப்படாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்."

 

***

(Release ID: 2134771)

AD/TS/PKV/DL


(Release ID: 2134788)