பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தானில் இரண்டு புதிய ராம்சார் பகுதிகள் கூடுவதற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
Posted On:
04 JUN 2025 10:28PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மேனார் மற்றும் பலோடியில் மேலும் இரண்டு பாலைவன சதுப்பு நிலங்கள் ராம்சார் பகுதிகளில் சேர்க்கப்படும் நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த இணைப்புடன் இந்தியாவில் தற்போது மொத்தம் 91 ராம்சார் பகுதிகள் உள்ளன.
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது பிரதமர் மோடியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சான்றாகும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது:
“சிறப்பான செய்தி! சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் முயற்சிகள் மிகுந்த வீரியத்துடனும், மக்கள் பங்கேற்புடனும் நடைபெற்று வருகிறது.”
***
(Release ID: 2133992)
AD/SMB/RR/KR
(Release ID: 2134056)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Telugu
,
Kannada