பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

46-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்


ரூ.90,000 கோடி மதிப்பிலான 8 முக்கிய திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு

உயிரி அடையாளம் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் அல்லது சரிபார்ப்பு மூலம் பயனாளிகளை அடையாளம் காண்பதை அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தல்

நகரின் வளர்ச்சிப் பாதையுடன் ஒத்துப்போகும் பரந்த நகர்ப்புற திட்டமிடல் முயற்சிகளின் முக்கிய அங்கமாக சுற்றுச் சாலை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்: பிரதமர்

ஜல் மார்க் விகாஸ் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக சாலைகளில் வலுவான சமுதாய இணைப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்

முழுமையான மற்றும் தொலைநோக்கு கொண்ட திட்டமிடலை செயல்படுத்த பிரதமரின் விரைவு சக்தி மற்றும் பிற ஒருங்கிணைந்த தளங்கள் போன்ற கருவிகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்

Posted On: 30 APR 2025 8:41PM by PIB Chennai

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் முனைப்பான ஆளுமை மற்றும் உரிய நேரத்தில் அமலாக்கத்திற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 46-வது பதிப்பின் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், மூன்று சாலை திட்டங்கள், ரயில்வே மற்றும் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகளின் தலா இரண்டு திட்டங்கள் உட்பட எட்டு குறிப்பிடத்தக்க திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள இந்தத் திட்டங்களின் ஒருங்கிணைந்த செலவு சுமார் ரூ .90,000 கோடி.

பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் தொடர்பான குறைகளை ஆய்வு செய்த பிரதமர், பயனாளிகளை அடையாளம் காணும் பணி உயிரி அடையாளம் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் அல்லது சரிபார்ப்பு மூலம் நடைபெறுவதை அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். குறிப்பாக, குழந்தை பராமரிப்பை ஊக்குவித்தல், சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல், தூய்மையை உறுதி செய்தல் மற்றும் தாய் மற்றும் சேயின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும் பிற தொடர்புடைய அம்சங்களுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கூடுதல் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

வட்டச் சாலை மேம்பாடு தொடர்பான உள்கட்டமைப்புத் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், விரிவான நகர்ப்புற திட்டமிடல் முயற்சிகளின் முக்கிய அம்சமாக வட்டச் சாலையின் வளர்ச்சி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வளர்ச்சியை முழுமையாக அணுக வேண்டும், இது அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில் நகரத்தின் வளர்ச்சிப் பாதையுடன் ஒத்துப்போகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். வட்டச் சாலையின் நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் திறமையான மேலாண்மை ஆகியவற்றின் பின்னணியில், சுய-நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் திட்டங்களில் குறிப்பாக கவனம் செலுத்தி, பல்வேறு திட்டமிடல் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் உத்தரவிட்டார். பொதுப் போக்குவரத்துக்கு ஒரு நிரப்பு மற்றும் நிலையான மாற்றாக நகரத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பிற்குள் ஒரு சுழற்சி ரயில் இணைப்பை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் அவர் வலியுறுத்தினார்.

ஜல் மார்க் விகாஸ் திட்டத்தை மதிப்பாய்வு செய்தபோது, ​​கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, நீட்டிப்புகளில் வலுவான சமூக இணைப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். இது வணிக மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், குறிப்பாக 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' முயற்சி மற்றும் பிற உள்ளூர் கைவினைஞர்களுக்கு, துடிப்பான உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்கும். இந்த அணுகுமுறை சமூக ஈடுபாட்டை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நீர்வழியை ஒட்டிய பகுதிகளில் பொருளாதார செயல்பாடு மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுபோன்ற உள்நாட்டு நீர்வழிகள் சுற்றுலாவிற்கும் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தத் கலந்துரையாடலின் போது, முழுமையான மற்றும் தொலைநோக்கு திட்டமிடலுக்குத் ஏதுவாக பிரதமரின் விரைவு சக்தி மற்றும் பிற ஒருங்கிணைந்த தளங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். துறைகளிடையே ஒருங்கிணைப்பை அடைவதற்கும், திறமையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் இத்தகைய கருவிகளின் பயன்பாடு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

போதிய தகவல்களுடன் முடிவெடுப்பதற்கும், பயனுள்ள திட்டமிடலுக்கும் நம்பகமான மற்றும் தற்போதைய தரவு அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்து தரவுத்தளங்களும் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதையும், துல்லியமாக பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு பிரதமர் மேலும் அறிவுறுத்தினார்.

பிரகதி கூட்டங்களின் 46வது பதிப்பு வரை, சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 370 திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

 

*****

RB/DL

(Release ID: 2125611)


(Release ID: 2125634) Visitor Counter : 23