பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம் பெறக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பிரதமர் அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAR 2025 8:47PM by PIB Chennai
2025 மார்ச் 30 அன்று ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம் பெறக் கூடிய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இம்மாத மனதின் குரல் நிகழ்ச்சிக்காக பல்வேறு வகையான கருத்துகள் பெறப்பட்டிருப்பது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"30-ம் தேதி நடைபெறவுள்ள இம்மாத #MannKiBaat- (மனதின் குரல்) நிகழ்ச்சிக்காகப் பரந்த அளவிலான கருத்துக்களைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கருத்துகள் சமூக நன்மைக்கான கூட்டு முயற்சிகளின் சக்தியை எடுத்துக்காட்டுகின்றன. இப்பகுதிக்கான தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மேலும் பலரை அழைக்கிறேன்.
https://www.mygov.in/group-issue/inviting-ideas-mann-ki-baat-prime-minister-narendra-modi-30th-march-2025/?target=inapp&type=group_issue&nid=357950"
***
(Release ID: 2114614)
TS/IR/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2114702)
வருகையாளர் எண்ணிக்கை : 65
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam