குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குடியரசுத்தலைவரை சந்தித்தார்

Posted On: 06 FEB 2025 8:15PM by PIB Chennai

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமது குடும்பத்தினருடன் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை 2025 பிப்ரவரி 06 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தார். குடியரசுத்தலைவரும் திரு டெண்டுல்கரும் அமிர்தப் பூங்காவைப் பார்வையிட்டனர்.

பின்னர் குடியரசுத்தலைவர் மாளிகையின் முன் முயற்சியில் நடைபெற்ற ‘குடியரசுத்தலைவர் மாளிகை விவாதத்தொடர்’ என்ற கலந்துரையாடல் அமர்வில்  திரு டெண்டுல்கர் ஒரு கிரிக்கெட் வீரராக தமது சொந்த பயணத்தில் இருந்து பெறப்பட்ட அனுபவங்கள் மூலம்  பெற்ற தன்முனைப்பு கோட்பாடுகளை பகிர்ந்து கொண்டார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆர்வமிக்க விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் பங்கேற்ற இந்த அமர்வில் குழுப் பணி, மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளுதல், மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடுதல், கடினஉழைப்பு, மன, உடல் உறுதி போன்ற வாழ்க்கைக் கட்டமைப்பு அம்சங்கள் பலவற்றை அவர் எடுத்துரைத்தார். தொலைதூரப் பகுதிகளில் இருந்தும், பழங்குடியின சமூகங்களிலிருந்தும்  அவ்வளவாக உரிமை பெறாத பகுதிகளிலிருந்தும் எதிர்கால விளையாட்டு வீரர்கள் வருவார்கள் என்று அவர் கூறினார்.

***

(Release ID: 2100443)

TS/SMB/AG/RR


(Release ID: 2100555) Visitor Counter : 27