பிரதமர் அலுவலகம்
சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
16 JAN 2025 10:35PM by PIB Chennai
சிங்கப்பூர் அதிபர் திரு. தர்மன் சண்முகரத்தினத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். "இந்திய-சிங்கப்பூர் விரிவான உத்திசார் கூட்டாண்மை பற்றி விரிவாக நாங்கள் விவாதித்தோம். குறைக்கடத்திகள், டிஜிட்டல்மயமாக்கல், தொழில் திறன், இணைப்பு மற்றும் பல்வேறு எதிர்காலத் துறைகள் குறித்து நாங்கள் பேசினோம்" என்று திரு மோடி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“முன்னதாக இன்று மாலை சிங்கப்பூர் அதிபர் திரு தர்மன் சண்முகரத்தினத்தைச் சந்தித்தேன். இந்திய-சிங்கப்பூர் விரிவான உத்திசார் கூட்டாண்மை பற்றி முழுமையாக நாங்கள் விவாதித்தோம். குறைக்கடத்திகள், டிஜிட்டல்மயமாக்கல், தொழில் திறன், இணைப்பு மற்றும் பல்வேறு எதிர்கால துறைகளைப் பற்றி நாங்கள் பேசினோம். தொழில், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம்.”
@Tharman_S
******************
TS/BR/KV
(Release ID: 2093665)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam