பிரதமர் அலுவலகம்
நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தின கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2024 8:10PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் முக்கிய தருணத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2024 நவம்பர் 26) மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற நிர்வாக கட்டட வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் அரசியல் சாசன தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். இந்திய நீதித்துறையின் ஆண்டறிக்கையையும் (2023-24) அவர் வெளியிட்டு, நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.
***
PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2077099)
வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam