பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

செஸ் ஒலிம்பியாட் வெற்றியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்

Posted On: 26 SEP 2024 4:30PM by PIB Chennai


சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.

செஃப்-டி-மிஷன், திப்யேந்து பருவா பிரதமரிடம் கூறுகையில், இந்தியா முதல் முறையாக தங்கப் பதக்கங்களை வென்றது, இதில் ஆடவர் அணி 22 புள்ளிகளில் 21 புள்ளிகளையும், பெண்கள் அணி 22 புள்ளிகளுக்கு 19 புள்ளிகளையும் பெற்றன, மொத்தம் 44 புள்ளிகளில் 40 ஆக இருந்தது என்று தெரிவித்தார்.

அரங்கில் நிலவிய சூழ்நிலை குறித்து பிரதமர் விசாரித்தபோது, செஸ் வீராங்கனை ஹரிகா துரோணவல்லி, வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, தங்களை  எதிர்த்து விளையாடிய வீரர்களும்  கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் என்றார். இந்தியாவில் சதுரங்கத்தின் புகழ் அதிகரித்து வருவதை எடுத்துரைத்த விதித் குஜ்ராத்தி, முடிவில்லாத ஆதரவின் காரணமாக இது ஒரு சிறந்த உணர்வு என்று கூறினார். 180 நாடுகள் பங்கேற்றது குறித்து டானியா சச்தேவ் பிரதமரிடம் தெரிவித்தார். கடந்த முறை சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரு இந்திய அணிகளும் வெண்கலம் வென்றதையும், அமெரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பெண்கள் அணியிடமிருந்து  தங்கப் பதக்கம் நழுவியதையும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த பதிப்பில் அதிக உத்வேகத்துடன் விளையாடி, இறுதியில் தங்கம் வென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் விளையாட்டில் தவறுகளைத் திருத்த அல்லது எதிரணியின் விளையாட்டின் தன்மையைப் புரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த பிரதமரின் கேள்விக்கு, ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, செயற்கை நுண்ணறிவுடன் சதுரங்கத்தின் பரிணாம வளர்ச்சியை எடுத்துரைத்தார், புதிய தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கணினிகள் சதுரங்கத்தில் நிறைய புதிய யோசனைகளைக் கொண்டு வருகின்றன, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்று அவர் கூறினார். 

பிரதமரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த திப்யேந்து பருவா, வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தங்கப் பதக்கங்களை இந்தியா வெல்லும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். பேருந்தில் திரும்பி வரும்போது பிரதமரின் உரையைப் பார்த்ததை  அவர் குறிப்பிட்டார். 1998 ஆம் ஆண்டில் தனது முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கேரி காஸ்பரோவ் மற்றும் கார்போவ் போன்ற வீரர்களின் ஆட்டோகிராஃப்கள் கேட்கப்பட்டதை நினைவு கூர்ந்த திரு பருவா, இந்த பதிப்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், திவ்யா, ஹரிகா மற்றும் பலர் ஆட்டோகிராஃப் வழங்குவதைக் கண்டு  மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களின் நம்பிக்கையை மாற்றியமைக்க பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2059391

********************* 

BR/KV



(Release ID: 2064498) Visitor Counter : 12