தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் 100 நாள் சாதனைகள் : மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் செய்தியாளர் சந்திப்பு
Posted On:
18 SEP 2024 2:50PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடியின் 100 நாள் சாதனைகள் குறித்து தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ரூ.15 லட்சம் கோடி முதலீடு
இந்த மகத்தான சாதனைகள் வளர்ச்சி அடைந்த பாரத்தின் தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாட்டை இட்டுச் செல்கின்றன என்று திரு எல். முருகன் கூறினார். வெறும் 100 நாட்களுக்குள், உள்கட்டமைப்பு, விவசாயம், பெண்கள் மேம்பாடு, பழங்குடியினர் நலன், பட்டியல் சமூகத்தினர் நலன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன், ஏழைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்காக ரூ .15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். விவசாயம், ஊரகப் பகுதிகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயத்தை வலுப்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல்
குறிப்பாக, இந்த 100 நாட்களில் உள்கட்டமைப்பில் ரூ.3 லட்சம் கோடிமுதலீடு செய்யப்பட்டுள்ளது. "குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி)5% முதல் 12.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, கூடுதலாக,பிரதமர்-கிசான்திட்டத்தின் 17 வது தவணையிலிருந்து ரூ .20,000 கோடி9.3 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று டாக்டர் முருகன் எடுத்துரைத்தார். மேலும், இந்த முதல் 100 நாட்களில் நாடு முழுவதும்பெண்களுக்குஅதிகாரம் அளிக்கும் வகையில் 3 கோடி வீடுகள்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மைல்கற்கள்: வந்தே பாரத் ரயில்கள், துறைமுக முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சி
தமிழ்நாட்டில், இந்த 100 நாட்களுக்குள்,சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கும்,மதுரையிலிருந்து பெங்களூருக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில்களுக்குப் பிரதமர் அனுமதி அளித்துத் தொடங்கி வைத்துள்ளதாக டாக்டர் எல் முருகன் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில், 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு புதிய முனைய துறைமுகம் ரூ. 7,000 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது என அவர் கூறினார். 11 புதிய நகரங்கள் பண்பலை வானொலி விரிவாக்கத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். குறைக்கடத்தி இயக்கத்தில் (செமிகண்டக்டர் மிஷன்) தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என அவர் குறிப்பிட்டார். மீன்வளத்துறையில், புதிய நீர்வாழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
100 நாட்களில் நடைபெற்றுள்ள இந்த சாதனைகள், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தி, பல்வேறு துறைகளில் விரைவான வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என மத்திய இணையமைச்சர் திரு எல். முருகன் தெரிவித்தார்.
***
(Release ID: 2055961)
PLM/AG/RR
(Release ID: 2056047)