உள்துறை அமைச்சகம்

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஒருமனதாக மீண்டும் தேர்வு

Posted On: 09 SEP 2024 8:19PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அரசு அமைந்த பிறகு, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவை மறுசீரமைப்பதற்கான, குழுவின் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குழுவின் தலைவராக அமித் ஷா தேர்வு செய்யப்பட்டார். திரு அமித் ஷா 2019 முதல் 2024 வரை குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார். ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் தமது நன்றியைத் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் தமது உரையில், கடந்த 75 ஆண்டுகளாக அலுவல் மொழியை ஊக்குவிக்க பணியாற்றி வருகிறோம், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அதன் முறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கே.எம். முன்ஷியும் என்.ஜி. ஐயங்காரும் பலருடன் கலந்தாலோசித்த பிறகு இந்தியை அலுவல் மொழியாக ஏற்கவும், அரசு பணிகளில் அதை ஊக்குவிக்கவும் எந்த உள்ளூர் மொழியுடனும் இந்தி போட்டியிடக் கூடாது என்றும் முடிவு செய்ததாக அவர் கூறினார்.

திரு. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, கடந்த 10 ஆண்டுகளில், இந்தி அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் நட்பு மொழியாக மாற குழு தொடர்ந்து முயற்சி செய்துள்ளது என்றும், அது யாருடனும் போட்டியிடவில்லை என்றும் திரு அமித் ஷா கூறினார். எந்த உள்ளூர் மொழியையும் பேசுபவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒருமித்த கருத்து மற்றும் ஒப்புதலுடன் இந்தி பொதுவாக அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் மொழியில் நாட்டை ஆளுவது மிகவும் முக்கியமானது என்றும், இது தொடர்பாக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுட்டிக் காட்டினார். கல்வித் துறையுடன் இணைந்து உள்ளூர் மொழிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சொற்களை இந்தியில் சேர்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார். இந்தியில் கிடைக்காத பல சொற்களின் இணைச்சொற்கள் இருந்தன, ஆனால் பிற மொழிகளிலிருந்து பல சொற்களை ஏற்றுக்கொண்டதன் மூலம், நாம் இந்தியை வளப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதை நெகிழ்வானதாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்தக் குறிப்பிட்ட மொழிக்கும் இந்திக்கும் இடையிலான உறவையும் வலுப்படுத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.

எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் தொழில்நுட்ப அடிப்படையில் தானாகவே மொழிபெயர்க்கும் அத்தகைய மென்பொருளை அலுவல் மொழித் துறை உருவாக்கி வருவதாக திரு அமித் ஷா கூறினார். இந்தப் பணி முடிந்தவுடன், இந்தி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டு, மிக வேகமாக நமது பணியில் பரிணமிக்கும். கடந்த 5 ஆண்டுகளில், நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம், குழுவின் அறிக்கையின் மூன்று பெரிய தொகுதிகளை குடியரசுத்தலைவரிடம் வழங்கியுள்ளோம், இது முன்பு ஒருபோதும் நடந்ததில்லை என்று அவர் கூறினார். இந்த வேகத்தை நாம் பராமரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை நமது பணியின் இரண்டு அடிப்படை அடித்தளங்களாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர், கூறினார். 2047-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று நமது நாட்டின் அனைத்துப் பணிகளும் இந்திய மொழிகளில் பெருமிதத்துடன் நடைபெறும் என்ற இலக்குடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார். 1000 ஆண்டுகள் பழமையான இந்தி மொழிக்கு நாம் புத்துயிர் அளிக்க வேண்டும், அதை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் நம் முன் விட்டுச் சென்ற பணியை முடிக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு மொழிக்கு புதிய உயிர் கொடுப்பதன் மூலமும், அதை ஏற்றுக்கொள்வதை அதிகரிப்பதன் மூலமும், சுதந்திர இயக்கத்தின் தொலைநோக்கு பார்வையாளர்களின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லோகமான்ய திலகர், மகாத்மா காந்தி, லாலா லஜபதி ராய், சி.ராஜகோபாலாச்சாரி, கே.எம்.முன்ஷி, சர்தார் படேல் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரும் இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வரவில்லை, ஆனால் ஒரு மாநிலத்திற்கு இடையே தகவல் தொடர்பு ஊடகமாக செயல்படும் ஒரு மொழி நம் நாட்டில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அனைவரும் உணர்ந்திருந்தனர். அதனால்தான் பிரதமர் மோடி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், குழந்தைகளின் ஆரம்பக் கல்வி அவரது தாய்மொழியில் இருக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தியுள்ளோம். குழந்தை தனது தாய்மொழியைக் கற்கும்போது, நாட்டின் பல மொழிகளுடன் இணைக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

முன்ஷி-ஐயங்கார் குழுவின் கீழ், மொழி பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒரு மொழி ஆணையம் அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது, ஆனால் அது மறக்கப்பட்டது என்று திரு அமித் ஷா கூறினார். எந்தவொரு இந்திய மொழியுடனும் போட்டியிடாமல், இந்தி மீதான ஒப்புதலை நாம் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்தி இப்போது வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து புதிய வயது தொழில்நுட்பங்களையும் இந்தி மொழியுடன் ஒருங்கிணைக்க இந்திய அரசும் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். புதிய கல்விக் கொள்கையில், அனைத்து தாய்மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது, இந்தக் குழு அதை இன்னும் முன்னெடுத்துச் செல்லும். இந்தி அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு 75-வது ஆண்டாகும் என்று கூறிய திரு அமித் ஷா, இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் மிகப் பெரிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தின் பிரிவு 4ன்படி 1976ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் 20 மக்களவையிலும், 10 மாநிலங்களவையிலும் இருந்து 30 உறுப்பினர்கள் உள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்ட எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். செயலாளர் திருமதி அன்ஷுலி ஆர்யா தலைமையிலான ஆட்சிமொழித் துறை அதிகாரிகளும், நாடாளுமன்றக் குழு அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

*****

 

(Release ID: 2053252)

PKV/KPG/RR



(Release ID: 2053437) Visitor Counter : 7