பிரதமர் அலுவலகம்
அபுதாபி பட்டத்து இளவரசரை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2024 8:40PM by PIB Chennai
அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மை தங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சையீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் வரவேற்பு அளித்தார். பல்வேறு பிரச்சனைகள் குறித்து இருதலைவர்களும் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட் நட்புறவு விரிவாக்கத்திற்கு ஷேக் கலீதின் ஆர்வத்தை திரு மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மை தங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சையீத் அல் நஹ்யானுக்கு வரவேற்பு அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாங்கள் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட் இடையே வலுவான நட்புறவை நோக்கிய அவரது ஆர்வம் தெளிவாக தெரிந்தது.”
***
(Release ID: 2053264)
SMB/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2053329)
வருகையாளர் எண்ணிக்கை : 127
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam