பிரதமர் அலுவலகம்

பிரதமர் அரசு முறைப் பயணமாக புருனே சென்றடைந்தார்

Posted On: 03 SEP 2024 3:46PM by PIB Chennai

சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக பண்டார் செரி பெகாவான் நகருக்கு இன்று சென்றடைந்தார்.

புருனேவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இந்தியா புருனே இடையேயான தூதரக உறவுகள் 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இது பிரதமரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாகும்.

பண்டார் செரி பெகாவான் வந்தடைந்த பிரதமருக்கு, சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே பிரதமர் அலுவலகத்தின் பட்டத்து இளவரசரும், மூத்த அமைச்சருமான மேதகு இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதீ பில்லா பிரதமரை அன்புடன் வரவேற்றார்.

இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்கு ஆகியவற்றில் புருனே முக்கிய கூட்டாளியாக உள்ளது. இந்தியாவும், புருனேயும் இருதரப்பு மற்றும் பலதரப்பு விவகாரங்களில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வு கொண்ட நட்புறவைக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் ஆயிரம் ஆண்டுகள் தொடர்பைக் கொண்டுள்ளன.

***

IR/KPG/KR/DL



(Release ID: 2051415) Visitor Counter : 15