பிரதமர் அலுவலகம்

கீவி-ல் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் அஞ்சலி

Posted On: 23 AUG 2024 3:24PM by PIB Chennai

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்குவதில் அமைதிக்கென மகாத்மா காந்தி வழங்கிய போதனையின் காலம் கடந்த பொருத்தத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். அவர் காட்டிய பாதை இன்றைய உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கீவில் உள்ள 'ஒயாசிஸ் ஆஃப் பீஸ்' பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை, மனிதகுலத்திற்கு நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கமாக உள்ளது.

----

LKS/KPG/KR/DL



(Release ID: 2048207) Visitor Counter : 14