உள்துறை அமைச்சகம்

திரிபுராவுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக ரூ.40 கோடியை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு ஒப்புதல்

Posted On: 23 AUG 2024 1:47PM by PIB Chennai

திரிபுராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக 40 கோடி ரூபாயை முன்கூட்டியே வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் (எஸ்.டி.ஆர்.எஃப்) இருந்து மத்திய பங்காக ரூ.40 கோடியை முன்கூட்டியே விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள், ராணுவத்தின் 3 குழுக்கள், விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவி வருகின்றன. திரிபுராவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் இந்த கடினமான காலங்களை எதிர்த்துப் போராட, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தோளோடு தோள் சேர்ந்து துணை நிற்கும்”.

***

(Release ID: 2048038)
PLM/RR/KR



(Release ID: 2048081) Visitor Counter : 19