பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நாடு முழுவதும் ரூ.50,655 கோடி மதிப்பில் 936 கிலோமீட்டர் நீளமுள்ள 8 முக்கிய தேசிய அதிவேக சாலை வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 02 AUG 2024 8:42PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், நாடு முழுவதும் ரூ.50,655 கோடி செலவில் 936 கிலோமீட்டர் நீளமுள்ள 8 முக்கிய தேசிய அதிவேக வழித்தடத் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த 8 திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 4.42 கோடி மனித நாட்கள் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

8 திட்டங்கள் தொடர்பான விவரம்:

1)   6-வழி ஆக்ரா - குவாலியர் தேசிய அதிவேக நடைபாதை:

88 கிலோமீட்டர் நீளமுள்ள அதிவேக வழித்தடம் 6-வழிப் பாதையாக ரூ .4,613 கோடி மொத்த செலவில் உருவாக்கப்படும். இந்த வழித்தடம் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். இது ஆக்ரா மற்றும் குவாலியர் இடையேயான பயண நேரத்தை 50% ஆக குறைக்கும். இதன் மூலம் சரக்கு போக்குவரத்து செலவுகளும் கணிசமாக குறையும்.

2)   4-வழி காரக்பூர் - மோரேகிராம் தேசிய அதிவேக வழித்தடம்:

கரக்பூர் மற்றும் மோர்கிராம் இடையே 231 கிலோ மீட்டர் 4 வழி அதிவேக வழித்தடம் ரூ. 10,247 கோடி மொத்த மூலதன செலவில் உருவாக்கப்படும். இது கரக்பூர் மற்றும் மோரேகிராம் இடையே போக்குவரத்து திறனை சுமார் 5 மடங்கு அதிகரிக்கும். மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும், நாட்டின் வடகிழக்குப் பகுதிக்கும் இடையேயான போக்குவரத்தில் இது சிறப்பான இணைப்பை வழங்கும்.

3)   6-வழி தரத் - தீசா - மெஹ்சானா - அகமதாபாத் தேசிய அதிவேக வழித்தடம்:

214 கிலோமீட்டர் நீளமுள்ள 6 வழி அதிவேக வழித்தடம், ரூ.10,534 கோடி மூலதன செலவில் உருவாக்கப்படும். தரத் – அகமதாபாத் வழித்தடம் குஜராத் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய தேசிய வழித்தடங்களான அமிர்தசரஸ் – ஜாம்நகர் வழித்தடம் மற்றும் தில்லி – மும்பை விரைவுச் சாலை ஆகியவற்றுக்கு இடையே இணைப்பை வழங்கும். இதன் மூலம் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொழில்துறை பகுதிகளிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய துறைமுகங்களுடன் சரக்கு வாகனங்களுக்கு தடையற்ற இணைப்பு ஏற்படுத்தப்படும்.  

4)   4 வழி அயோத்தி ரிங் ரோடு (சுற்றுச் சாலை):

68 கிலோ மீட்டர் 4 வழி அயோத்தி சுற்றுச் சாலை ரூ. 3,935 கோடி மொத்த மூலதன செலவில் உருவாக்கப்படும். இந்த சுற்றுச் சாலை நகரின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளான தேசிய நெடுஞ்சாலை 27 (கிழக்கு மேற்கு வழித்தடம்), தேசிய நெடுஞ்சாலை 227 ஏ, தேசிய நெடுஞ்சாலை 227 பி, தேசிய நெடுஞ்சாலை 330, தேசிய நெடுஞ்சாலை 330ஏ மற்றும் தேசிய நெடுஞ்சாலை 135ஏ ஆகியவற்றில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும். லக்னோ சர்வதேச விமான நிலையம், அயோத்தி விமான நிலையம் மற்றும் நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து வருகை தரும் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சுற்றுச் சாலை தடையற்ற இணைப்பை வழங்கும்.

5)   ராய்ப்பூர்-ராஞ்சி தேசிய அதிவேக வழித்தடத்தின் பதல்கான் மற்றும் கும்லா இடையேயான பிரிவு:

ராய்ப்பூர் – ராஞ்சி வழித்தடத்தின் பதல்கான் – கும்லா பிரிவில் 137 கி.ஆர்.என் 4 வழிச்சாலை கட்டுப்பாட்டில் உள்ள பதல்கான் – கும்லா பிரிவு, மொத்த மூலதனச் செலவு ரூ. 4,473 கோடி செலவில் உருவாக்கப்படும். இது கும்லா, லோஹர்டாகா, ராய்கர், கோர்பா மற்றும் தன்பாத் ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப் பகுதிகள் மற்றும் ராய்ப்பூர், துர்க், கோர்பா, பிலாஸ்பூர், பொகாரோ மற்றும் தன்பாத் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழில்துறை மற்றும் உற்பத்தி மண்டலங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.

6)   6-லேன் கான்பூர் ரிங் ரோடு:

கான்பூர் வட்டச் சாலையின் 47 கிலோ மீட்டர் 6 வழி பிரிவு, ரூ. 3,298 கோடி மொத்த மூலதன தொகுப்பில் உருவாக்கப்படும். கான்பூரைச் சுற்றியுள்ள 6 வழி தேசிய நெடுஞ்சாலை வளையத்தை இந்தப் பிரிவு நிறைவு செய்யும். முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளான தேசிய நெடுஞ்சாலை 19 - தங்க நாற்கரச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 27 - கிழக்கு மேற்கு வழித்தடம், தேசிய நெடுஞ்சாலை 34 மற்றும் வரவிருக்கும் லக்னோ - கான்பூர் விரைவுச் சாலை மற்றும் கங்கா விரைவுச் சாலை ஆகியவற்றில் உள்ள நீண்ட தூர போக்குவரத்தை நகரம் செல்லும் போக்குவரத்திலிருந்து பிரித்து, உத்தரப்பிரதேசம், தில்லி, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் இடையே சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த இந்த சுற்றுச் சாலை உதவும்.

7)   4-வழி வடக்கு குவஹாத்தி புறவழிச்சாலை மற்றும் தற்போதுள்ள குவஹாத்தி புறவழிச்சாலையை அகலப்படுத்துதல் / மேம்படுத்துதல்:

121 கிலோ மீட்டர் நீளமுள்ள குவஹாத்தி சுற்றுச் சாலை ரூ.5,729 கோடி செலவில் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் மீது ஒரு பெரிய பாலமும் கட்டப்படும். நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்திற்கான நுழைவாயிலாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலை 27-ல் (கிழக்கு மேற்கு நடைபாதை) இயங்கும் நீண்ட தூர போக்குவரத்துக்கு குவஹாத்தி வட்டச் சாலை தடையற்ற இணைப்பை வழங்கும். இந்த சுற்றுச் சாலை குவஹாத்தியைச் சுற்றியுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும். இது பிராந்தியத்தின் முக்கிய நகரங்களான சிலிகுரி, சில்சார், ஷில்லாங், ஜோர்ஹாட், தேஜ்பூர், ஜோகிகோபா மற்றும் பார்பேட்டாவை சிறப்பாக இணைக்கும்.

8)   புனே அருகே 8-வழி உயர்நிலை நாசிக் பாட்டா கேத் வழித்தடம்:

புனே அருகே நாசிக் பாட்டாவிலிருந்து கேட் வரையிலான 30 கிலோமீட்டர் நீளமுள்ள எட்டு வழி உயர்த்தப்பட்ட தேசிய அதிவேக வழித்தடம் ரூ.7,827 கோடி மொத்த மூலதன செலவில் உருவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை 60-ல் உள்ள சக்கன், போசாரி போன்ற தொழில் மையங்களில் இருந்து புனே மற்றும் நாசிக் இடையே இந்த உயர்த்தப்பட்ட வழித்தடம் தடையற்ற அதிவேக இணைப்பை வழங்கும்.

பின்னணி:

உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது ஒரு நாட்டின் பொருளாதார செழிப்புக்கு அடித்தளமாகும். அது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 மடங்கு வரை பெருக்க விளைவைக் கொண்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் உலகத் தரம் வாய்ந்த சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2013-14-ல் 0.91 லட்சம் கிலோ மீட்டரிலிருந்து தற்போது 1.46 லட்சம் கிலோ மீட்டராக 6 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி மற்றும் ஒப்படைப்பு ஆகியவற்றின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது. உதாரணமாக, தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை வழங்குவதற்கான சராசரி வருடாந்திர வேகம் 2004-14 ஆம் ஆண்டில் சுமார் 4,000 கிலோ மீட்டராக இருந்தது. இது சுமார் 2.75 மடங்கு அதிகரித்து2014-24ல் 11,000 கிலோ மீட்டராக உள்ளது. இதேபோல், தேசிய நெடுஞ்சாலைகளின் சராசரி வருடாந்திர கட்டுமானமும் 2004-14ல் சுமார் 4,000 கிலோ மீட்டரிலிருந்து 2014-24-ல் சுமார் 9,600 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் முதலீடு உட்பட மொத்த மூலதன முதலீடு 2013-14-ல் ரூ.50.000 கோடியிலிருந்து 2023-24-ல் சுமார் ரூ.3.1 லட்சம் கோடியாக 6 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், முந்தைய திட்ட அடிப்படையிலான மேம்பாட்டு அணுகுமுறையுடன் ஒப்பிடுகையில், உள்ளூர் நெரிசலுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி, நிலையான தரநிலைகள், பயனர் வசதி மற்றும் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் ஆகியவற்றை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. வழித்தட அடிப்படையிலான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.

*****

PLM/DL



(Release ID: 2041110) Visitor Counter : 17